வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகில் உள்ள பேர்ணாம்பட்டில் இன்று காலை தொடர்ந்து இரண்டு முறை நில அதிர்வு உணரப்பட்டதால், அங்கிருந்த மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
பயங்கர நில அதிர்வு :
வேலூர் மாவட்டத்தின் குடியாத்தம் அருகில் உள்ள பேர்ணாம்பட்டி என்ற கிராமத்தில் இன்று காலை 9.30 மணிக்கு லேசான நில அதிர்வு உணரப்பட்டது. கிட்டத்தட்ட சுமார் 3 நிமிடங்கள் வரை உணரப்பட்ட இந்த நில அதிர்வால் வீடுகளில் இருந்த பாத்திர பண்டங்கள் ஆட்டம் காண ஆரம்பித்தது. இதனால், வீடுகளில் இருந்து வெளியேறிய மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதற்கு முன்னால், கடந்த நவம்பர் மாதம் 29ம் தேதி இதே கிராமத்தின் அருகில் உள்ள 5 இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டது.
இதற்கு முன் கடந்த 23ம் தேதி உணரப்பட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகியிருந்தது. தொடர்ந்து மூன்று முறை ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக அங்குள்ள மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இதனால், அந்த பகுதியில் பல்வேறு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்