தமிழக தலைநகரான சென்னை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் லேசான நில நடுக்கம் உணரப்பட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அடிக்கடி வெள்ள பாதிப்புக்கு உள்ளாகும் சென்னை மக்கள் தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால் கடும் அச்சத்தில் உள்ளனர்.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கூட ராஜஸ்தானில் சிகர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.6 ஆகப் பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் தற்போது வரை ஏற்பட்ட நிலநடுக்கங்களில் பெரிதாக பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் இல்லை.
இந்நிலையில் சென்னையிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதாவது அடையாறு, பெசன்ட் நகர், அண்ணா நகர், கொட்டிவாக்கம், ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் லேசான நிலநடுக்கத்தை மக்கள் உணர்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வருடாவருடம் டிசம்பர் மாதங்களில் பெய்யும் மழையால் சென்னையில் வெள்ள பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவும். இந்நிலையில் இந்த நிலநடுக்க செய்தி மக்களை அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்