இந்தியா உட்பட அனைத்து மாநிலங்களிலும் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு புறம் பெட்ரோல், டீசல் விலையும் அதிகரித்து வருவதால் மக்களின் ஆர்வமும் எலக்ட்ரிக் கார், பைக்களின் மீது திரும்பியுள்ளது. என்னதான் இ-வாகனங்களின் பயன்பாடு அதிகரித்தாலும் நாட்டில் மின்சார சார்ஜிங் பாயிண்ட் நிலையங்கள் ஒரு சில இடங்களில் மட்டுமே உள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதனால் சார்ஜிங் பாயிண்ட்களை அதிகரிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் தமிழக மின்சார வாரியம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் 100 இடங்களில் பார்க்கிங் உள்ளிட்ட வசதிகளுடன் சார்ஜிங் பாயிண்ட் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
TNTET-ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஒரே வாரத்தில் ஆசிரியர் பணி ?? முக்கிய தகவல்!!!
இதற்கு ஒப்புதல் அளிக்க ஒழுங்குமுறை ஆணையத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதல் கிடைத்துவிட்டால், கோடை வெயிலின் தாக்கம் முடிந்தவுடன் சார்ஜிங் பாயிண்ட் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும் என மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
—