கொரோனா பரவலை கட்டுப்படுத்த மீண்டும் அமலுக்கு வருகிறது இ-பதிவு முறை.மாவட்டங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் பயணம் செய்ய இ -பதிவு மிகவும் அவசியம் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தனது மனைவியின் இறுதி சடங்கில் பிபிஇ சூட்டில் அருண்ராஜா – இணையத்தை உலுக்கிய புகைப்படம்!!
கட்டாயமாக்கப்படும் இ -பதிவு முறை:
கடந்த ஆண்டை போலவே இந்த முறையும் இ -பதிவு முறை தமிழகத்தில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்யவும்,மாநிலங்களுக்கு இடையே பயணம் செய்யவும் இ-பதிவு முறை அவசியமாக கருதப்பட்டது.தற்போது மாவட்டங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் பயணம் செய்ய இ-பதிவு முறை அவசியமாக்கபட்டுள்ளது.இ-பதிவு பெறுவதற்கு செல்போன் மூலம் விண்ணப்பிப்பது எப்படி என்பது பற்றிய தகவல்களையும் தமிழக அரசு விரிவாக வெளியிட்டுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
இ -பதிவிற்கு விண்ணப்பிப்பவர்கள் https://eregister.tnega.org/#/user/pass என்ற லிங்க் மூலம் உள்நுழைந்து மொபைல் எண் பதிவு செய்த பிறகு கேப்சாவை நிரப்ப வேண்டும்.அதன் பின் மொபைல் க்கு வரும் ஒ.டி.பி. எண் பதிவிட்டு கேப்சா நிரப்ப வேண்டும்.அதன்பின்பு விண்ணப்பத்தில் கேட்கப்பட்ட விவரங்களை பூர்த்தி செய்து திருமண நிகழ்வு என்றால் திருமண அழைப்பிதழ் போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.இ-பாஸ் பெறுவதற்கு தங்கள் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்கலாம்.விண்ணப்பம் சமர்பிக்கப்பட்டதும் குறிப்பு எண்ணுடன் எஸ்.எம்.எஸ். மற்றும் இ-மெயிலுக்கு தகவல் அனுப்பப்படும்.இதுபோன்று இ-பதிவு இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்கள் மீதும் வாகனத்தின் மீதும் வழக்கு பதிவு செய்யப்படுவதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.