மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை சந்தைப்படுத்தும் வகையில் மத்திய அரசானது புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது .
சுய உதவி குழுக்கள் :
தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட சுய உதவி குழு திட்டம் வறுமை கோட்டிற்கு கீழுள்ள மக்களுக்களின் தனித்திறமைகளை மேம்படுத்தவும் மற்றும் அவர்களுக்கு பொருளாதார ரீதியாகவும் செயல்பட்டு வருகிறது .இந்த சுய உதவி குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை சந்தைப்படுத்த மத்திய அரசானது புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது .
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதனை தொடர்ந்து சுய உதவிக் குழுக்களை சேர்ந்த உறுப்பினர்களின் பொருட்களை விற்பதற்கான மின்னணு தளம் அமைக்கப்படும் என கடந்த மாதம் செங்கோட்டை தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார். இதனை அடுத்து ஊரக மேம்பாட்டு அமைச்சகம் கடந்த அக்டோபர் மாதம் 28ஆம் தேதி மின்னணு தளத்தை அறிமுகப்படுத்தியது.
ஹவுஸ் மேட்டுகளை மோத விட்ட பிக் பாஸ்., இதைத்தான், எதிர்பாராததை எதிர் பாருன்னு சொன்னீங்களா?
சுய உதவி குழுக்கள் மூலம் தயாரிக்கப்படும் பொருட்கள் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம், மாநில ஊரக வாழ்வாதார இயக்கங்களால் அமைக்கப்பட்ட நேரடி கடைகளில் மட்டுமே பெண்கள் தங்களுடைய பொருட்களை விற்கும் நிலை இருந்தது. ஆனால் இப்போது மின்னணு தளத்தை பயன்படுத்தி தயாரிக்கும் பொருட்களை லாபகரமாக விற்பனை செய்து வருகின்றனர் .