திமுக ஆட்சிக்கு வந்தால் மக்களை பாதிக்கும் ஸ்மார்ட் கார்டு திட்டம் ரத்து செய்யப்படும் என்று திமுக பொது செயலாளர் துரை முருகன் கூறியுள்ளார்.
ஸ்மார்ட் ரேஷன் கார்டு:
காட்பாடி தொகுதி முத்தரசி குப்பம் கிராமத்தில் நேற்று அதிமுகவை நிராகரிக்கிறோம் எனும் தலைப்பில் திமுக கிராம சபை கூட்டம் அக்கட்சியின் பொது செயலாளர் துரை முருகன் MLA தலைமையில் நடைபெற்றது. இதில் ஒன்றியசெயலாளர் கருணாகரன் தலைமையில் திமுகவினர் கலந்துகொண்டனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அதன்பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில் துரைமுருகன் பல தகவல்களை பகிர்ந்துகொண்டார். அதில் அவர் கூறியதாவது, “பொங்கல் பரிசு திட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை. பொங்கல் பரிசுப்பணத்தை, ரூ.2500லிருந்து உயர்த்தி ரூ.5000மாக வழங்க வேண்டுமெனதான் கூறிவருகிறோம். மேலும் அந்த பண பட்டுவாடா மக்கள் பணியாற்றும் அரசு ஊழியர்கள் மூலமாகத்தான் நடைபெற வேண்டுமெனவும் வலியுறுத்துகிறோம்.
‘தலைவா நீங்க அரசியலுக்கு கட்டாயம் வர வேண்டும்’ – ரஜினி வீட்டின் முன்பு ரசிகர்கள் போராட்டம்!!
வரும் தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் மக்களை பெரிதும் பாதிக்கும் ஸ்மார்ட் ரேஷன் கார்டு திட்டத்தை ரத்து செய்யவோம்” எனக்கூறினார். ரஜினிகாந்தின் முடிவு பற்றி கேள்வி எழுப்பப்பட்டபோது, “அவர் தனது உடல் நிலையை கருத்தில் கொண்டுதான் அரசியல் கட்சி தொடங்கவில்லை எனும் முடிவை எடுத்துள்ளார் என் நினைக்கிறேன்” என்று பதிலளித்தார்.