உலகின் நம்பர் 1. வீரரான நோவக் ஜோகோவிச் துபாய் ஓபன் டென்னிஸின் அரையிறுதியில் ரஷ்ய வீரரை எதிர்கொள்ள உள்ளார்.
நோவக் ஜோகோவிச்:
டென்னிஸின் உலகின் நம்பர் 1. வீரரான செர்பிய நாட்டை சேர்ந்த நோவக் ஜோகோவிச் துபாய் ஓபன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த தொடரின் ஒற்றையர் பிரிவில் பங்குபெற்றுள்ள இவர், தகுதி சுற்றில் நெதர்லாந்து வீரரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
காலிறுதிப் போட்டியில், போலந்தின் ஹூபர்ட் ஹர்காக்ஸை, நோவக் ஜோகோவிச் எதிர்கொண்டார். இந்த போட்டியில், முதல் செட்டை 6-3 என்ற புள்ளி கணக்கில் கைப்பற்றிய ஜோகோவிச், 2வது செட்டை 7-5 என்ற புள்ளி கணக்கில் போராடி வென்றார். இதன் மூலம், தொடர்ந்து இரண்டு செட்டை வென்று அரையிறுதி சுற்றுக்கு ஜோகோவிச் முன்னேறியுள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இன்று இரவு நடைபெற உள்ள அரையிறுதிப் போட்டியில், ஜோகோவிச் ரஷ்யாவை சேர்ந்த டேனியல் மெட்வெடேவ்-வை எதிர்கொள்ள உள்ளார். இந்த தொடரின் மற்றொரு அரையிறுதி போட்டியில், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் எதிர்த்து ரஷ்யாவின் ஆண்ட்ரி ரூப்லெவ் மோத உள்ளார். இன்றைய அரையிறுதியில் போட்டியில் வெற்றி பெறுவோர் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேற உள்ளனர்.