துபை ஓபன் செஸ் போட்டியில் 6-வது சுற்றின் முடிவில் இந்திய வீரர் அர்ஜுன் எரிகைசி 5.5 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா 5 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
இந்திய வீரர்கள் அசத்தல்!
துபாயில் 22 வது துபை ஓபன் செஸ் போட்டி மூன்று வருடங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் மொத்தம் 171 வீரர்கள் பங்கேற்கின்றனர். இவர்களில் 78 இந்திய வீரர்கள் உட்பட பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி போன்ற பல முன்னணி செஸ் வீரர்களும் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்த போட்டி வரும் செப்டம்பர் 5 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்த செஸ் தொடரில் இதுவரை நடைபெற்ற நான்கு சுற்றுகளில் வெற்றி பெற்ற பிரக்ஞானந்தா முன்னிலையில் இருந்தார்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஆனால் நேற்று நடைபெற்ற ஐந்தாவது சுற்றில் தோல்வி அடைந்ததால் பின் தங்கி உள்ளார். இதனைத் தொடர்ந்து இன்று ஆறாவது சுற்றில் சக இந்திய வீரர் ஷர்துல் காகரேவை வீழ்த்தி வெற்றி பெற்றதன் மூலம் 5 புள்ளிகளுடன், புள்ளி பட்டியலில் நான்கு வீரர்கள் உடன் இணைந்து இரண்டாம் இடத்தில் உள்ளார். இதனை தொடர்ந்து மற்றொரு இந்திய வீரரான அர்ஜுன் எரிகைசி தற்போது 5.5 புள்ளிகள் பெற்று ரஷ்யா வீரருடன் இணைந்து முதல் இடத்தில் உள்ளார்.