மராட்டிய மாநிலம் நாசிக்கில் உள்ள சொகுசு பங்களாவில் நள்ளிரவில் போதை விருந்து நடப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து அங்கு ரகசியமாக சென்று சோதனை மேற்கொண்டதில் பிரபல நடிகைகள் மற்றும் பிக் பாஸ் போட்டியாளர் ஒருவர் போலீசில் சிக்கியுள்ளனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர்.
சுற்றுலா பகுதியாக இருக்கும் நாசிக் மாவட்டம் இகத்புரியில் உள்ள ஒரு பங்களா வீட்டில் போதை விருந்து நடைபெறுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து நள்ளிரவில் போலீசார் அந்த பங்களாவிற்கு சென்றுள்ளனர். பங்களாவுக்கு வெளியே விலை உயர்ந்த சொகுசு கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது, மேலும் அந்த பங்களா உள்ளே பாடல்கள் அதிக சத்தத்துடன் பாடிக்கொண்டிருந்தது. இவைகளை வைத்து ஸ்கை தாஸ், ஸ்கை லாகூன் என அடுத்தடுத்து உள்ள 2 பங்களாக்களில் போதை விருந்து நடந்து கொண்டு இருப்பதை உறுதி செய்தனர் போலீஸ்.
இதைத்தொடர்ந்து திடீரென உள்ளே நுழைந்த போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஆண்களும், பெண்களும் போதை மயக்கத்தில் அரைகுறை ஆடைகளுடன் கும்மாளம் அடித்துக்கொண்டு இருந்தனர். போலீசாரை பார்த்ததும் அதிர்ந்து போன அவர்கள் செய்வது அறியாமல் நின்றனர். அதன் பின்னர் போலீசார் அங்கிருந்த அனைவரையும் கைது செய்தது.
இதுபற்றி நாசிக் போலீஸ் கூறுகையில்,”அந்த சோதனையில் 12 பெண்கள், 10 ஆண்களை கைது செய்து உள்ளோம். இவர்கள் தடை செய்யப்பட்ட போதைப்பொருள், ஹூக்கா பயன்படுத்தி இருந்தனர். இந்த 12 பெண்களில் ஒருவர் பிக் பாஸ் போட்டியாளர் ,தென்னிந்திய நடிகைகள், மாடல் அழகிகள் ஆகியோர் உள்ளனர். இந்த போதை விருந்துக்கு ஏற்பாடு செய்த நபரை தேடி வருவதாகவும் தெரிவித்து உள்ளார். மேலும் இது தொடர்பாக நைஜீரிய பெண் ஒருவர் மும்பையில் பிடிபட்டு உள்ளதாகவும் கூறியுள்ளனர்”. போதை விருந்து தொடர்பாக பல பிரபலங்கள் சிக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்