மாநகர பேருந்துகளில் முன்சீட்டில் உட்காரும் பெண் பயணிகளிடம் டிரைவர் பேசக்கூடாது என கோயம்புத்தூர் போக்குவரத்துக் கழகம் டிரைவர்களுக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கண்டக்டருக்கு முன் சீட்டு..!
சென்னை உள்ளிட்ட நகரங்களில் மாநகர பேருந்துகளில் நடத்துனர்களுக்கு பஸ்ஸின் கடைசியில் சீட் ஒதுக்கப்பட்டு இருக்கும். ஆனால் கோயம்புத்தூரில் இரவு நேரங்களில் விபத்து நேராமல் தவிர்க்க கண்டக்டர்களுக்கு முன்புறத்தில் சீட் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதுமட்டுமில்லாமல் பல பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அம்மாநில போக்குவரத்துக் கழகம்.
பெண்களிடம் பேசக் கூடாது..!
சமூக ஆர்வலர்கள் சிலர் பஸ்ஸில் டிரைவர்கள் முன் சீட் மற்றும் பேனட்டில் உட்காரும் பெண்களிடம் பேசியபடி செல்வதால் அதிக விபத்துகள் நிகழ்வதாக புகார் அளித்தனர். இதனால் பேருந்துகளில் டிரைவர்கள் முன் சீட்டில் உட்காரும் பெண்களுடன் பேசக்கூடாது என கோவை போக்குவரத்துக் கழகம் உத்தரவு பிறப்பித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |