நாம் தூங்கும்போது கனவுகள் வருவது இயற்கையான ஒன்று ஆனால் நாம் காணும் கனவுகளுக்கு ஏற்றார் போல் சில பலன்கள் உள்ளன. எல்லா கனவுகளுக்கும் பலன்கள் இருப்பதில்லை. ஆனால் சில குறிப்பிட்ட கனவுகளுக்கு பலன்கள் உள்ளன.
கனவுகள்
நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது கனவுகள் வருகின்றனர் அப்படிப்பட்ட கனவுகளுக்கு என்னனென்ன பலன்கள் என்று பார்க்கலாம்.
- பிரதமர், ஜனாதிபதி ஆவது போல் கனவு கண்டால் அந்தஸ்து புகழ் ஏற்படும். கன்னி பயன் அல்லது பெண்களுக்கு இந்த மாதிரி கனவு வந்தால் வரப்போகும் வாழ்க்கைத்துணை வசதி மிக்கவராக இருக்க போகிறார்கள் என்று அர்த்தம்.
- அடிதடி சண்டை போடுவது போல கனவு கண்டால் உங்கள் வாழ்கை அமைதியானதாக அமையும். மேலும் எதிரிகள் இருக்கமாட்டார்கள். அப்படி இருந்தாலும் அவர்கள் நண்பர்கள் ஆகி விடுவார்கள்.
- அழுவது போல கனவு கண்டால் அவர் வாழ்க்கையில் உங்கள் வாழ்க்கையில் பல இடையூறுகள் ஏற்படலாம்.
- இறந்தவர்கள் கனவில் வந்து பேசுவதுபோல கனவு கண்டால் நீங்கள் பேர், புகழ் அடைய போகிறீர்கள் என்று அர்த்தம்.
- கோவில் கனவுகளில் வந்தால் செய்யும் தொழில் விரக்தி அடையும். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிட்டும்.
- அலுவலகத்தில் வேலை பார்ப்பது போல் கனவு கண்டால் உங்களுக்கு நல்ல காலம் என்று அர்த்தம். வேலை கிடைக்காதவர்களுக்கு விரைவில் நல்ல வேலை அமையும்.
- இறந்த தாய் தந்தையர் கனவில் வந்து பேசினால் நமக்கு எதோ துன்பம் வரப்போவதை எச்சரிக்கின்றனர் என்று அர்த்தம்.
- கோவிலில் விழாக்கள் நடைபெறுவது போன்று கனவு கண்டால் உறவினர்கள் யாரோ மரணம் அடைய போகிறார்கள் என்று அர்த்தம்.
- உங்கள் கனவில் எதிரிகள் வந்தால் எதோ கேட்டது நடக்க போகிறது என்று அர்த்தம்.
- கடல் கனவில் வந்தால் நீங்கள் வெளிநாடு செல்லும் யோகம் கிட்டும். இல்லையெனில் வெளிநாட்டு அலுவலகங்களில் வேலை கிடைக்கும்.