ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவரான சதீஸ் ரெட்டி, கொரோனா தொற்றுக்கு எதிரான 2டிஜி மருந்தின் இரண்டாம் தொகுப்பு மே 27 ஆம் வந்தடையும் என கூறியுள்ளார். மேலும் இவர் தேவைகளை பொறுத்து ஒரு லட்சம் 2டிஜி மருந்துகளை உற்பத்தி செய்வது பற்றியும் தாங்கள் கூறுவோம் என்று தெரிவித்து உள்ளார்
கொரோனா நிவாரணத்திற்கு திருநங்கைகள் செய்த செயல் – குவியும் பாராட்டுக்கள்!!
கொரோனா தொற்றுக்கு எதிராக, தற்போது இந்தியாவில், ‘கோவாக்சின், கோவிஷீல்டு’ என, இரண்டு வகையான தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இரண்டும், நம் நாட்டில் தயாரிக்கப்படுகின்றன. மேலும், ரஷ்ய தயாரிப்பான, ‘ஸ்புட்னிக் வி’ என்ற தடுப்பூசியை பயன்படுத்தவும், மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று உள்ளோருக்கு, ‘ரெம்டெசிவிர்’ மருந்தும் வழங்கப்படுகின்றது.இதை தவிர்த்து ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் விஞ்ஞானிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு,
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
மிகச் சிறந்த பலன் அளிக்கக் கூடிய, உயிர் பலியை தடுக்கக் கூடிய, ‘2டிஜி’ எனப்படும், ‘2 டி ஆக்சி டி குளுக்கோஸ்’ என்ற தடுப்பு மருந்தை கண்டுபிடித்து உள்ளனர். இந்த தடுப்பு மருந்தை பயன்படுத்த, டி.ஜி.சி.ஐ., எனப்படும், இந்திய மருந்து கட்டுப்பாடு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.இது குளுக்கோஸ் அடிப்படையிலான மருந்து என்பதால், நம் நாட்டிலேயே அதிகளவில் இதை தயாரிக்க முடியும்.தற்போது பயன்பாட்டில் உள்ள மருந்துகளைவிட, இந்த மருந்தை பயன்படுத்துவதால், 2.5 நாட்களுக்கு முன்பே, இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த நிலையில் இந்த 2டிஜி மருந்தின் இரண்டாம் தொகுப்பு மே 27 ஆம் தேதி வரும் எனவும், மேலும் இதன் உற்பத்தி ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கப்படும் எனவும் DRDO தலைவர் கூறியுள்ளா