மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தற்கொலை அல்ல அது ஒரு கொள்ளை தான் என்று முன்னாள் மத்திய அமைச்சர் சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் மரணம்:
பாலிவுட்டில் சிறந்த நடிகர் என்று பெயரெடுத்தவர், நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட். அவரது பல படங்கள் வெற்றி படங்களாக உள்ளது, மேலும் அவரது நடிப்பு பலரும் விரும்பிய வண்ணம் இருந்து வந்தது, ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்னால், சுஷாந்த் தனது வீட்டில், தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
வோட்காவை குடித்து கொரோனாவை விரட்டுங்கள் – அதிபர் சர்ச்சை பேச்சு!!
இது அவரது ரசிகர்கள் மட்டும் அன்றி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரது ரசிகர்கள், பாலிவுட்டில் அரசியல் நடக்கிறது, இவர் தற்கொலை செய்து கொள்ளும் ஆள் கிடையாது என்று விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்கப்பட்டபட்டது.
சுப்ரமணிய சாமி ட்வீட்:
முன்னாள் மத்திய அமைச்சர் சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை வெளியிட்டார். அதில், ” சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொள்ளவில்லை, அவர் கொலை தான் செய்யப்பட்டு உள்ளார். நான் இதனை ஆதாரப்பூர்வமாக தான் சொல்கிறேன். இவர் கொலை செய்யப்பட்டு உள்ளார் என்று ரிப்போர்ட் கூறுகிறது.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
Why I think Sushanth Singh Rajput was murdered pic.twitter.com/GROSgMYYwE
— Subramanian Swamy (@Swamy39) July 30, 2020
தசைநார் அடையாளத்தின் நீளம், கழுத்தில் பயன்படுத்தப்பட்ட துணியுடன் பொருந்தாத குறி, விதவிதமான மார்க் சி.சி.டி.வி செயலிழப்பு, காணாமல் போன அறை நகல் சாவி, அவரது மேலாளர் திஷா சாலியன் தற்கொலை, சிம் கார்டு மாற்றப்பட்டது, பணியாளர் மாற்றும் அறிக்கை மற்றும் அவருக்கு நீதி நெருக்கடி கிடையாது, இப்படி இருக்க இவர் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்.”
சுஷாந்த் சிங் மரணம் குறித்து சந்தேகம் காரணமாக சுஷாந்த் மரண விவகாரத்தை CBI விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதினார், சுப்ரமணிய சாமி என்பது குறிப்பிடத்தக்கது.