இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் வேகமெடுத்துள்ளது. இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களிடம் தற்போது சோதனை செய்த பொழுது மரபணு மாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மரபணு மாறிய கொரோனா
பொதுவாகவே வைரஸ் என்றால் உருமாறும் தன்மையை உடையது. அந்த வகையில் கடந்த ஆண்டு இறுதியில் இங்கிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் உருமாறி பரவ தொடங்கியது. இந்த உருமாறிய கொரோனா பழைய கொரோனா வைரஸை விட வீரியம் மிக்கது. மேலும் எளிய வகையில் மனிதர்களை தாக்கும் ஆற்றல் மிக்கது அந்த உருமாறிய கொரோனா. இங்கிலாந்தை போல் மற்ற சில உலக நாட்டிலும் புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
முந்தைய கொரோனா வைரஸே இன்னும் நீங்காத நிலையில் புதிய வகை கொரோனா ஏற்படுவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதன் காரணமாக வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு திரும்புபவர்களிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் தற்போது சோதனையில் முடிவில் இந்தியாவில் மரபணு மாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இதனை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்தது. இந்த மரபணு மாறிய கொரோனாவை மத்திய சுகாதாரத்துறை Double Mutant Variant என்று கூறுகிறது.
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை – தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரம்!!
மேலும் அந்த பரிசோதனைக்காக ஆய்வின் முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. முந்தைய கொரோனாவிற்கே தற்போது தான் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. அப்படி இருந்தும் அது நாடு முழுவதும் முழுவதுமாக வழங்கப்படவில்லை. இந்நிலையில் இந்தியாவில் மற்றொரு வகை கொரோனா ஏற்பட்டிருப்பது சற்று கவலைக்குரிய விஷயமே. இதனை தற்போது கட்டுப்படுத்துவது குறித்து மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.