மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை மாநகரத்தின் ஸ்பெஷல்களில் ஒன்று டபுள் டெக்கர் பேருந்துகள். கடந்த 86 ஆண்டுகளாக இயக்கப்பட்டு வரும் இந்தப் பேருந்துகள் சுற்றுலாப் பயணிகளின் வரவேற்பை பெற்று வந்தது. இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் மின்சாரத்தால் இயங்கும் டபுள் டெக்கர் பேருந்துகளை அறிமுகம் செய்தது மஹாராஷ்டிரா அரசு.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதையடுத்து, மும்பையின் வரலாற்று சிறப்புமிக்க டபுள் டெக்கர் பஸ்கள் வரும் அக்டோபர் மாதம் 5 ஆம் தேதியில் இருந்து இயக்கப்படாது என்று மஹாராஷ்டிரா மாநில நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த பேருந்துகளுக்குப் பதிலாக மின்சாரத்தால் இயங்கும் டபுள் டெக்கர் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.