தமிழகத்தில் சமீப காலமாக சூப்பர் மார்க்கெட், ஷாப்பிங் மால்கள், மார்ட்கள் உள்ளிட்ட இடங்களில் இருக்கும் கடைகளில் பொருட்களை வாங்கி பில் போடும் போது கவுண்டரில் இருக்கும் ஊழியர் வாடிக்கையாளர்களின் செல்போன் நம்பர் வாங்குவது வாடிக்கையாக நடந்து கொண்டு தான் இருக்கிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அந்த கடைகள் கொடுக்கும் ஆஃபர் உள்ளிட்ட தகவலை கொடுப்பதற்காகவே போன் நம்பரை வாங்குகிறார்கள். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் சைபர் கிரைம் மோசடி அதிகமாக நடந்து வருகிறது. இதனால் மக்கள் தங்களது நம்பரை கொடுக்க தயக்கம் காட்டுகின்றனர். இது குறித்து நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகத்திடம் புகார் எழுப்பபட்டது.
தமிழகத்தில் குட்கா, பான் மசாலா புகையிலை பொருட்களுக்கு ஓராண்டு தடை – அரசு அதிரடி உத்தரவு!!
இந்நிலையில் நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது வாடிக்கையாளர்களிடம் நம்பர் வாங்கினால் மட்டுமே பில் போட முடியும் என்று சொல்வது அர்த்தமற்ற செயல். எனவே இனிமேல் சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட கடைகளில் இனி வாடிக்கையாளர்கள் நம்பர் வங்கி கூடாது என்று நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.