கேரளாவில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருடந்தோறும் மண்டல, மகர விளக்கு பூஜைகள் கோலாகலமாக நடைபெறும். இந்த பூஜையை காணவே பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருவார்கள். எனவே கூட்ட நெரிசலை தவிர்க்க கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு பல விதிமுறைகளை அறிவித்து வருகின்றனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அந்த வகையில் வரும் ஜனவரி 14 ஆம் தேதி மகரவிளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது. இதனால் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே வருகிறது. எனவே பக்தர்களின் தேவைகளுக்கு ஏற்ப அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க நேற்று சன்னிதானத்தில் மாஜிஸ்திரேட் விஷ்ணுராஜ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(04.01.2023) – முழு விவரம் உள்ளே!!
இந்த கூட்டத்தில் அவர்கள் கூறியது “நாளுக்குநாள் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. அதுவும் ஜனவரி 11 வரும் பக்தர்கள் மகர பூஜை தரிசனம் முடிந்தபிறகே செல்வார்கள். ஆகையால் அவர்கள் தங்குவதற்கு தேவையான வசதிகளை சன்னிதானம் அமைத்து தரும் என்றும், மேலும் தீ மூலம் ஏற்படும் விபத்தை தடுக்க பம்பை முதல் சன்னிதானம் வரை யாரும் சமையல் வேலைகள் செய்யக்கூடாது என்றும் சன்னிதானம் சபரிமலை பக்தர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.