நாடு முழுவதும் உள்நாட்டு உற்பத்தி பொருட்களை மேம்படுத்த ஒன்றிய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், ஆடைகள் உள்ளிட்டவையை வெளிநாடு பிராண்டாக வாங்காமல் உள்நாட்டு தயாரிப்பில் உருவானவையை இந்திய மக்கள் வாங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
அப்படி உள்நாட்டு பொருட்களை வாங்குபவர்கள், அந்த பொருளுடன் செல்ஃபி எடுத்து “நமோ” செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த செயல் மற்றவர்களையும் ஊக்குவித்து உள்நாட்டு வியாபாரிகள் பெருமளவில் பயனடைவதோடு சொந்த தொழில் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.