தங்கள் நாட்டில் இனி நாய் இறைச்சி விற்பனையை அனுமதிக்க முடியாது என்றும், இந்த இறைச்சி மீதான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி விற்பனைக்கு தடை விதிப்பதாகவும் தென் கொரிய அரசு அறிவித்துள்ளது.
தென் கொரிய அரசின் அதிரடி:
தென் கொரிய மக்கள் தங்கள் உணவில் நாய் இறைச்சி உண்பதை பிரதானமாக வைத்துள்ளனர். இந்த நாட்டில், ஒவ்வொரு ஆண்டும் இறைச்சிக்காக 10 லட்சம் நாய்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீப காலமாக மக்கள் இந்த நாய் இறைச்சி உண்பதை தவிர்த்து வருவதால், மிகப்பெரிய மூன்று நாய் இறைச்சி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இனி தங்கள் நாட்டில் நாய் இறைச்சி உட்கொள்ள தடை விதிப்பதாகவும், இந்த இறைச்சி மீதான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி விற்பனையை நிரந்தரமாக தடை செய்வதாகவும் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் அறிவித்துள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்