மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்த நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் குழு …!வீடியோவை வெளியிட்டு நெகிழ வைத்த மிர்ச்சி செந்தில்!!!

0

இந்த இக்கட்டான காலத்தில் மக்களின் உயிரை காக்கும் கடவுளாக இருப்பவர்கள் மருத்துவர்கள் தான். இந்நிலையில்  தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் குழுவினர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளனர்.

விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் நாம் இருவர் நமக்கு இருவர். இதில் மாயா என்ற கதாபாத்திரத்தில் மிர்ச்சி செந்தில் மற்றும் மஹா கதாபாத்திரத்தில் ரச்சித்தா நடித்து வருகின்றனர். இதற்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்த சீரியல் தற்போது மிக விறுவிறுப்பாக போய்க்கொண்டு இருக்கிறது. அதாவது முத்தரசனை கொலை செய்தது யார் என்ற பரபரப்பில் சீரியல் நகருகிறது.

இந்நிலையில், ஜூலை 1 ஆம் தேதியாகிய இன்று தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த கொரோனா காலத்தில் தங்களின் உயிரையோ , குடும்பத்தினர் உயிரையோ பொருட்படுத்தாமல் மக்கள் பணி  ஆற்றுகின்றனர். அத்தகைய தெய்வங்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் குழு ஒரு வீடியோவை பதிவு செய்து உள்ளனர். இந்த வீடியோவை சீரியல் நாயகன் மிர்ச்சி செந்தில் தனது  இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இந்தப் பதிவு அனைவரையும் நெகிழ வைத்து உள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Mirchi Senthil (@mirchisenthil983)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here