அறுவை சிகிச்சையின் போது வயிற்றில் டவலை வைத்து தைத்த மருத்துவர்கள் – பஞ்சாபில் பரபரப்பு!!

0

பஞ்சாப் மாநிலத்தில் மருத்துவர்கள் அலட்சியத்தால் அறுவை சிகிச்சையின் பொது வயிற்றில் டவலை வைத்து அறுவை சிகிச்சை செய்ததால் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மருத்துவர்கள் அலட்சியம்:

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் ரவீந்தர் என்பவரின் மனைவி பிரசவ வலி காரணமாக கடந்த டிசம்பர் 7-ம் தேதி சிவில் மருத்துவமணையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு டிசம்பர் 8-ம் தேதி அன்று அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. பின் வீடு திரும்பிய அவருக்கு அடிக்கடி வயிறு வலி ஏற்பட்டது தொடர்ந்து சிறுநீர் கழிக்க முடியாமல் போனதால் வயிறு வீங்கி கொண்டே சென்றது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆகையால் அவர் ஏற்கனவே சிகிச்சை அளித்த சிவில் மருத்துவமனையை அணுகியுள்ளார். அப்பெண்ணை பரிசோதித்த சிவில் மருத்துவமனை டாக்டர்கள் அரசு ராஜிந்திரா மருத்துவமனைக்கு கொண்டுசெல்லுமாறு கூறியிருக்கிறனர். ஆனால் ரவீந்தர் தனது மனைவியை சி.எம்.சி மருத்துவமனையில் பரிசோதித்துள்ளார். அங்கு ஸ்கேன் செய்து பார்த்த டாக்டர்கள் உடனே அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர்.

அறுவை சிகிச்சை முடிந்த பின் ரவீந்தர் மனைவியின் கர்ப்பப்பையில் துணி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ரவீந்தர் மற்றும் அவரின் குடும்பத்தினர் அலட்சியமாக நடந்துகொண்ட சிவில் மருத்துவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் செய்தனர். மேலும் அந்த மருத்துவமனை முன்பு 1 மணி நேரம் மேலாக போராட்டம் நடத்தினர். சிவில் மருத்துவமனையில் இதுபோன்ற புகார்கள் வருவது முதன்முறையல்ல. இதற்குமுன்பே, 2019-ம் ஆண்டு மே மாதம், தாய்-சேய் பிரிவில் பி பாஸிட்டிவ் ரத்தம்கொண்ட ஒரு நோயாளிக்கு ஏ பாஸிட்டிவ் ரத்தத்தை ஏற்றிய அலட்சிய சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here