இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன் தொடருக்கான இறுதிப் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தற்போது 17.5 ஓவர் முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 60 ரன்கள் குவித்துள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
தொடக்கத்திலே அனல் பறக்கும் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்நிலையில் ரோகித் சர்மா அஸ்வினை ஏன் பிளேயிங் 11னில் எடுக்கவில்லை என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் இது குறித்து பேசிய ரோஹித், அஸ்வினை அணியில் எடுக்காதது எனக்கே கஷ்டமாகத்தான் இருக்கிறது.
இலவச லேப்டாப் இனி இவங்களுக்கு மட்டும் தான்…, அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!
ஆனால் மைதானம் மற்றும் அணியின் சூழ்நிலையை பொறுத்தே தான் பிளேயிங் 11 னை தேர்வு செய்ய முடியும். அதனால் தான் அஸ்வினை எடுக்கவில்லை என ரோகித் சர்மா கூறியுள்ளார். தற்போது வரை அஸ்வினை அணியில் எடுக்காதது குறித்து ரசிகர்கள் மட்டுமே விமர்சனம் செய்து வரும் நிலையில் ஒருவேளை இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை தவறவிட்டால் கிரிக்கெட் விமர்சகர்கள் உட்பட BCCI யும் கேள்வி எழுப்புவார்கள் என்று தான் எதிர்பார்க்கப்படுகிறது.