திமுக கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆக இருந்த விபி துரைசாமியிடம் இருந்து நேற்று பதவி பறிக்கப்பட்ட நிலையில், இன்று காலை அவர் பாஜக.,வில் இணைந்து உள்ளார்.
பதவி பறிப்பு:
திமுகவில் 1989-91 வரையும், 2006-11 வரையும் துணை சபாநாயகராகப் பொறுப்பு வகித்தவர் வி.பி.துரைசாமி மேலும் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்த இவர் முக்கிய பொறுப்புகளில் ஒன்றான துணைப் பொதுச்செயலாளர் ஆகவும் பதவி வகித்து வந்தார். இவர் நேற்று இரவு தீடிரென திமுக துணைப் பொதுசெயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இவருக்கு பதிலாக அந்தியூர் செல்வராஜ்க்கு அந்த பதவி வழங்கப்பட்டது.
தமிழக பாஜக., தலைவர் எல் முருகன் அவர்களை சந்தித்தது, திமுக தலைமைக்கு எதிராக பேசியது போன்ற காரணங்களுக்காக இவர் பதவி பறிக்கப்பட்டதாக கூறப்பட்டு உள்ளது. இந்நிலையில் இன்று காலை தமிழக பாஜக தலைமையகமான கமாலயம் சென்று தன்னை பாஜக.,வில் இணைத்துக் கொண்டார். அதற்கு முன்னர் திமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தன்னை விடுவிக்குமாறு தலைமைக்கு இவர் கடிதம் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |