திமுக துணை பொதுச்செயலாளராக ஆ.ராசா, பொன்முடி நியமனம் – முக ஸ்டாலின் அறிவிப்பு!!

0

திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கட்சியின் புதிய பொதுச்செயலாளர், பொருளாளர் மற்றும் துணை பொதுச்செயலாளர்களை முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார். மேலும் புதிதாக தேர்வானவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

திமுக நிர்வாகிகள்:

திராவிட முன்னேற்ற கழகத்தின் (திமுக) புதிய நிர்வாகிகளை இன்று காணொளி வாயிலாக நடைபெற்ற பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் அறிவித்தார். இக்கூட்டத்தில் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் 3500க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். திமுகவின் 4வது பொதுச்செயலாளர் ஆக துரைமுருகனும், 8வது பொருளாளர் ஆக டி.ஆர் பாலுவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுடன் போட்டியிட வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத காரணத்தால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. புதிதாக பதவி ஏற்றவர்களுக்கு ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

durai-murugan-with-stalin
durai-murugan-with-stalin

திமுக கட்சியின் துணைப்பொதுச்செயலாளர்கள் ஆக ஏற்கனவே ஐ.பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ் மற்றும் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகிய மூவர் உள்ள நிலையில் கூடுதலாக ஆ.ராசா, பொன்முடியை நியமித்து முக ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இதன் மூலம் திமுக துணைப்பொதுச்செயலாளர்கள் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்து உள்ளது. திமுக சட்டத்திட்ட விதி பிரிவு 17(3)ன் படி இவர்கள் நியமிக்கப்பட்டதாக ஸ்டாலின் தெரிவித்தார்.

5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தம் – அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் தொடங்க உள்ள நிலையில் அதற்கான வியூகங்கள் வகுப்பது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here