கேரளா சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட பெரம்பலூர் முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமாரை விடுதலை செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
பாலியல் வன்கொடுமை:
2012ம் ஆண்டு கேரள மாநிலத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று 2018ம் ஆண்டு பெரம்பலூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து எம்எல்ஏ ராஜ்குமார் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டு இருந்தது.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேரள சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் இருந்து திமுக எம்எல்ஏ ராஜ்குமாரை விடுதலை செய்தும் அவருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்தும் உத்தரவு பிறப்பித்து உள்ளனர்.