புதுவையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தேசிய கூட்டணி கட்சி வெற்றி பெற்று புதுவை முதல்வராக ரங்கசாமி பதவியேற்றுள்ளார். இந்நிலையில் புதுவையில் பாஜக ஆட்சி அமைக்க முயற்சிப்பதாக கூறி துரைமுருகன் கடுமையாக தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
துரைமுருகன்:
தமிழகம், புதுவை உட்பட ஐந்து மாநிலங்களில் கடந்த மாதம் பல கட்டமாக தேர்தல் நடந்தது. அதில் தமிழகம் புதுவை போன்ற பகுதியில் ஒரே கட்டமாக தேர்தல் கொரோனா பரவலுக்கு மத்தியில் நடைபெற்றது. அதற்கான முடிவுகள் கடந்த மே மாதம் 2ம் தேதி வெளியானது. புதுவையில் என்.ஆர். காங்கிரஸ், பாஜக மற்றும் அதிமுக கட்சிகள் கூட்டணியிட்டு போட்டியிட்டது.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
தற்போது இந்த கூட்டணி கட்சிகள் புதுவையில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதால் புதுவையின் முதல்வராக ரங்கசாமி பதவியேற்றுள்ளார். இந்நிலையில் அங்கு எம்.எல்.ஏக்கள் பதவி ஏற்பதற்கு முன்பே மத்திய அரசு 3 நியமன எம்.எல்.ஏக்களை நியமித்ததாக குற்றம் எழுந்தது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தற்போது இதுகுறித்து திமுக பொது செயலாளர் துரைமுருகன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அதன்படி அவர் கூறியாதவது, புதுவையில் பாஜக கட்சி கொல்லைப்புறமாக ஆட்சி அமைக்க முயற்சிப்பதா?மக்கள் தீர்ப்பை மாசுபடுத்த வேண்டாம், மத்திய அரசு செய்த செயல் கண்டனத்திற்குரியது என்று கடுமையாக தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார் துரைமுருகன