கோவையில் மிக விரைவாக பரவி வரும் கொரோனா பரவலை தடுக்க நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் தி.மு.க அமைச்சர்களுடன் அதிமுக எம்.எல்.ஏ கள் இணைந்து கலந்துகொண்டது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
களப்பணியில் இணைந்து செயல்படும் காட்சிகள்:
அதி தீவிரமாக பரவிவரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மத்திய மற்றும் மாநில அரசு இணைந்து பல்வேறு நடவடிக்கைக;லாய் மேற்கொள்கின்றனர்.தற்போது தமிழகத்தில் சென்னைக்கு அடுத்ததாக கோவையில் கொரோனா பரவல் மிக அதிகமாக காணப்படுகிறது.
அதனை தடுக்கவும் கட்டுப்படுத்தவும் என்ன முற்சிகள் மேற்கொள்ளவேண்டும் எனும் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினர்.அவ்வாறு நடத்தப்பட்ட ஆலோசனைகூடத்தில் தி.மு.க அமைச்சர்களுடன், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் இணைந்து கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தை கோவை மாவட்டப் பொறுப்பு அமைச்சர்கள் ராமச்சந்திரன் (வனத்துறை), சக்கரபாணி (உணவுத்துறை) ஆகியோர் தலைமை தாங்கினார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இரு கட்சியை சேர்ந்த மக்கள் ஒற்றுமையுடன் செயல்படுவதை கண்டு மக்கள் பெரும் ஆச்சர்யத்தில் உள்ளனர்.மேலும் இவர்களின் இந்த அனுகுமுறைகளை மக்கள் பெரிதும் வரவேற்கின்றனர்.