தமிழகத்தில் தேர்தல் களம் பரபரப்பாக இருந்து வரும் நிலையில் தற்போது திமுகவின் ஆ.ராசா ஸ்டாலின் மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஒப்பிட்டு பேசியுள்ளார். தற்போது அது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஆ.ராசா:
தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் தேர்தல் களமே மிக பரபரக்க இருந்து வருகிறது. மேலும் பிரச்சாரத்தின் போது திமுக மற்றும் அதிமுக கட்சி மாற்றி மாற்றி குறைகூறியும் விமர்சித்தும் வருகின்றனர். இதனால் கூட பெரிய பிரச்சனைகள் ஏதும் வரவில்லை. ஆனால் தற்போது திமுகவின் ஆ.ராசா ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமியை ஒப்பிட்டு ஓர் சர்ச்சையான கருத்தை தெரிவித்துள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதனால் அதிமுகவினர் கடுப்பாகினர். ஆ.ராசா ஸ்டாலினின் காலணியுடன் ஒப்பிட்டு பேசுவது போல் எடப்பாடி பழனிசாமியை பேசியுள்ளார். இதனால் அதிமுகவினர் கொந்தளித்தனர். மேலும் இதுகுறித்து அதிமுக தேர்தல் ஆணையத்திடம் ஆ.ராசா விதிமுறையை மீறியுள்ளதாக கூறி அவரை பிரச்சாரத்திற்கு செல்ல தடை விதிக்குமாறு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது இதுகுறித்து ஆ.ராசா பேசியுள்ளார்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு ஜூன் மாத்திற்கு ஒத்திவைப்பு?? பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை!!
ஆவர் கூறியதாவது, முதல்வரின் மாண்புக்கு சேதம் விளைவிக்கும் வகையில் நான் எந்த கருத்தையும் வெளியிடவில்லை. நான் ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமியை அரசியல் குழந்தையாக ஒப்பிட்டு பேசியதை சமூகவலைத்தளங்கள் வெட்டியும் ஒட்டியும் திரித்து பரப்பி வருகின்றனர் என்று விளக்கமளித்துள்ளார். இருந்தாலும் கூட இவரது பேசசுக்கு தற்போது அதிமுக தொண்டர்கள் கடுமையாக பொங்கி வருகின்றனர்.