தேர்தலை விட்டு ஒதுங்கும் தேமுதிக?? தொண்டர்கள் அதிர்ச்சி!!

0

சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய தேமுதிக கட்சி, தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக முடிவு செய்தது. இந்நிலையில் கட்சியின் நலனை கருத்தில் கொண்டு தேர்தலிலிருந்து விலகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தேமுதிக கூட்டணி

2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கட்சியுடன் தேமுதிக கூட்டணியில் இருந்து வந்தது. கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப்பங்கீடுகளை பிரிப்பதில், அதிமுக கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அதிமுகவுடனான கூட்டணியிலிருந்து விலகியது தேமுதிக. தொடர்ந்து டிடிவி தினகரனின் அமமுக கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்ள பேச்சு வார்த்தையில் இறங்கியது தேமுதிக.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த பேச்சு வார்த்தையிலும் உடன்பாடு ஏற்படாததால் அமமுக கூட்டணியிலிருந்தும் விலகியது. இந்நிலையில் திமுக கட்சி கொடுத்த 10 தொகுதிகளை வேண்டாம் என்று மறுத்துவிட்டது தேமுதிக. தொடர்ந்து கூட்டணி விஷயத்தில் எந்த கட்சியுடனும் தேமுதிகவிற்கு உடன்பாடு இல்லாததால் அக்கட்சி தேர்தலில் தனித்து போட்டியிட விருப்பம் தெரிவித்தது.

சென்னை இன்றைய தங்க விலை நிலவரம்!!

கூட்டணி கட்சிகளுக்கான பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிந்ததால் இந்த தேர்தலில் போட்டியிடலாமா, வேண்டாமா என்று தேமுதிக தலைமை ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டாம் என மாவட்ட நிர்வாகிகள் தேமுதிக தலைமையை எச்சரித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here