கொரோனா பரவல் எதிரொலி – மற்ற மாவட்ட மருத்துவர்கள் சென்னைக்கு வரவழைப்பு!!

0

யாருமே எதிர்பார்க்காத வகையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக சுகாதாரத்துறை பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழகம்:

தமிழகத்தில் தற்போது அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இதனை இன்னும் பரபரப்பாக்கும் வகையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனாவின் பாதிப்பு யாரும் எதிர்பாராத வகையில் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசுக்கு கீழ் இயங்கும் பள்ளி வகுப்புகளான 9,10 மற்றும் 11ம் வகுப்பு பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் கடந்த 11 நாட்களில் மட்டும் சுமார் 10,000 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு இறுதியில் கட்டுக்குள் வந்த கொரோனா தற்போது மீண்டும் அசுர வேகத்தில் பரவ துவங்கியுள்ளது. இதனை தடுக்கும் வகையில் தமிழக சுகாதாரத்துறை பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி சென்னையில் தடுப்பூசி போடுவதற்கு சிறப்பு முகாம் அமைத்து மக்களுக்கு வழங்கி வருகின்றனர். மேலும் சனிக்கிழமை தோறும் முகாம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளனர்.

கொரோனா பரவல் எதிரொலி – மநீம கட்சி வேட்பாளருக்கு கொரோனா தொற்று உறுதி!!

இதனை தொடர்ந்து தமிழகத்தில் இதுவரை சுமார் 20.86 லட்ச பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இருந்தும் கூட கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து தான் வருகிறது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கூட 1,289 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த மூன்று நாட்களாக ஆயிரத்தை தாண்டி வருகிறது என்பது வேதனைக்குரியதே. இதனை தடுக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் சென்னைக்கு மருத்துவர்கள் வரவுள்ளனர்.  எந்த மருத்துவரையும் நாங்கள் கட்டாயப்படுத்தி அழைத்து வரவில்லை. அவங்க விருப்பத்தின் பெயரில் தான் சென்னைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here