11 எம்எல்ஏ.,க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு முடித்து வைக்கப்பட்டது – தீர்ப்பு விபரம்..!

0
O Panner Selvam
O Panner Selvam

தமிழக துணை முதல்வர் பன்னீர் செல்வம், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உட்பட 11 எம்எல்ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று முடித்து வைக்கப்பட்டது.

அரசுக்கு எதிராக வாக்கு..!

2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆட்சியில் இருந்த எடப்பாடி தலைமையிலான எம்எல்ஏ.,க்கள் கொண்ட குழு சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது நடைபெற்ற வாக்கெடுப்பில் பன்னீர் செல்வம் தலைமையிலான 11 எம்எல்ஏ.,க்கள் கொண்ட குழு அரசுக்கு எதிராக வாக்களித்தது.

என்னென்ன அறிவிப்புகள்?? எவ்வளவு ஒதுக்கீடு?? – தமிழக பட்ஜெட் 2020..!

இதனால் அதிமுக கட்சி கொறடா விதிமுறைகளை மீறி செயல்பட்டு உள்ளது எனவே அந்த 11 எம்எல்ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடங்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கின் விசாரணையும் நடைபெற்று வந்த வேளையில் இன்று இதற்கான தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

சபாநாயகரே முடிவு செய்யலாம்..!

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இந்த தகுதி நீக்கம் குறித்த முடிவை தமிழக சட்டசபை சபாநாயகரே எடுப்பார் என தீர்ப்பு வழங்கி உள்ளது. மேலும் இந்த முடிவு எடுப்பதற்கு சபாநாயகருக்கு காலக்கெடு விதிக்க முடியாது எனவும், இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here