சர்வதேச சந்தையில் கோழி, முட்டைகளின் தேவை அதிகரித்து வருவதால் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து பல்வேறு இடங்களுக்கு பிராய்லர் கோழி, முட்டை போன்றவற்றை ஏற்றுமதி செய்கின்றனர். இதையடுத்து கடந்த சில தினங்களாக திருவனந்தபுரத்தில் அழூரில் உள்ள பெருமாங்குழி பகுதியின் பண்ணைகளில் கோழி மற்றும் வாத்துகள் இறந்து வந்தது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதை பரிசோதித்ததில் பறவை காய்ச்சல் பரவி உள்ளதாக அதிகாரிகள் உறுதி செய்தனர். இதனால் உடனடியாக பண்ணையை சுற்றியுள்ள இரண்டாயிரம் பறவைகளை அழிக்க கேரள அரசு உத்தரவிட்டது. மேலும் பெருமாங்குழி பகுதியை சுற்றி 9 கி.மீ. சுற்றளவில் இறைச்சி, முட்டை விற்பனைக்கு தடை செய்தனர்.
தமிழகத்தில் இவர்களுக்கான 10% இட ஒதுக்கீட்டுக்கு வாய்ப்பே இல்லை., அரசு திட்டவட்டம்!!
இந்நிலையில் தினசரி நாமக்கல்லில் இருந்து கேரளாவுக்கு வளர்ப்பு கோழி, முட்டை போன்றவைகளை அதிக அளவிலான எண்ணிக்கையில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் கேரளாவின் பறவை காய்ச்சல் அச்சுறுத்தலால் நாமக்கல் சுற்று வட்டாரங்களில் உள்ள கோழிப் பண்ணைகளுக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.