பிரபல இயக்குனர் விக்ரமன் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் நடிகர் விஜயின் அரசியல் குறித்து பேசி உள்ளார்.
நடிகர் விஜய்
நடிகர் விஜய் தனது வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் லியோ என்ற படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். தற்போதைய படத்தின் ஷூட்டிங் காஷ்மீர் பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது. பொதுவாக விஜய் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே பல பிரச்சனைகள் கிளம்பும். அதற்கு முக்கியமான காரணம் அரசியல் தான். தளபதியின் ஐம்பதாவது படமான சுறா திரைப்படம் பிளாப் ஆன போதிலும் படத்தோட டைட்டில் பெரிய சர்ச்சையை கிளப்பியது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதாவது “சுறா தி லீடர்” என்ற டக்லைன் குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சியினால் ஏற்றுக்கொள்ள முடியாமல் பிரச்சனைகளை கிளப்பினர். அதேபோல் தான் தலைவா திரைப்படம் ரிலீஸ் ஆகும் போதும் பிரச்சனை எரிமலை போல் வெடித்தது. அதற்கு காரணம் தலைவா டைம் டு லீட் என்ற டக்ன்லைன் காரணமாக தான் அரசியல் பிரச்சனை கிளம்பியது. அது மட்டுமின்றி அரசியலில் சூழ்ச்சியால் இந்த படமும் சரியாக ஓடாமல் பிளாப் ஆனது. இந்த நிலையில் பிரபல இயக்குனரான விக்ரமன் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் அவரின் அரசியல் குறித்து பேசி உள்ளார்.
அவர் பேசியதாவது, தளபதி விஜய் மிகவும் அமைதியான மனிதர். அவரின் கேரக்டருக்கு அரசியல் சுத்தமாக செட் ஆகாது. அதுமட்டுமின்றி விஜய்க்கு அரசியலில் களமிறங்கும் எண்ணம் தற்போது வரை இல்லை என்று தான் நான் நினைக்கிறேன் என்று கூறியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் விஜய்க்கு ஆர்வம் இருக்கிறது என்று பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது விக்ரமன் கூறியதை கேட்டு ரசிகர்கள் வியப்பாக பார்த்து வருகின்றனர்.