ஓய்வு நேரத்தில் விவசாயியாக அவதாரம் எடுத்த இயக்குனர் வெற்றிமாறன் – வைரலாகும் போட்டோ!!

0

தமிழ் சினிமாவில் அசத்தி வரும் இயக்குநர்களில் ஒருவரான இயக்குனர் வெற்றிமாறன் தனது ஓய்வு நேரத்தை வீணாக செலவிடாமல் தன்னுடைய நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். அது சம்மந்தப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இயக்குனர் வெற்றிமாறன்:

தமிழ் சினிமாவில் பொல்லாதவன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் வெற்றிமாறன். இதை தொடர்ந்து ஆடுகளம்,விசாரணை,வட சென்னை, அசுரன் ஆகிய படங்களை இயக்கி உள்ளார். மேலும் உதயம் என்.எச். 4, நான் ராஜாவாகப் போகிறேன், பொறியாளன், காக்கா முட்டை,கோடி,அண்ணனுக்கு ஜே ஆகிய திரைப்படங்களை தயாரித்தும் உள்ளார்.

தற்போது வெற்றிமாறன், நடிகர் சூர்யா நடிப்பில் வாடிவாசல் என்ற படத்தை இயக்கி வருகிறார். இவர் தனது படப்பிடிப்புக்கு இடையே கிடைத்த நேரத்தில் தனது நிலத்தில் விவசாயம் செய்தும் வருகிறார். சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் வெற்றிமாறனிடம் இது குறித்து கேட்ட போது “சினிமாவை விட நாற்று நடுவது கஷ்டம்” என்று கூறியுள்ளார். தற்போது இவர் விவசாயம் செய்யும் புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது. பலர் இவரின் செயலை பாராட்டவும் செய்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here