பிரபல இயக்குனர் வெற்றிமாறன் செயின் ஸ்மோக்கராக இருந்து ஒரு திரைப்படம் ஏற்படுத்திய தாக்கத்தால் அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். இன்று (04-09-2022) அவரின் பிறந்தநாள் அன்று அந்த தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் வெற்றிமாறன்:
தமிழ் சினிமாவில் தோல்வியே கண்டிராத இயக்குனர்களில் ஒருவராக திகழ்வர் தான் வெற்றிமாறன். நடிகர் தனுஷை வைத்து பொல்லாதவன் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். இவர் எடுத்த ஐந்து படங்களுமே சூப்பர் ஹிட் அடித்து வெற்றிப்படங்களாக அமைந்தது. மேலும் இவர் 5 தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது. இன்று வெற்றிமாறன் தனது 47 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில் ஒரு நாளில் மட்டும் கிட்டத்தட்ட 170 சிகரெட் வரை ஊதித்தள்ளும் அளவுக்கு செயின் ஸ்மோக்கராக இருந்த வெற்றிமாறன் அவர் அதிலிருந்து மீண்ட கதை தற்போது வெளியாகியுள்ளது.
அதாவது இயக்குனர் வெற்றிமாறன் தனது 13 வயதில் இருந்து புகைப் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். இதனால் அவரின் உடல்நிலையில் கொஞ்சம் மாற்றங்கள் ஏற்பட்டது. இதை அறிந்த வெற்றிமாறன் மருத்துவர்களை அணுகி தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவர்கள் சிகரெட் பழக்கத்தை கைவிடாவிட்டால் நிலைமை ரொம்ப மோசமாகிடும் என்று தெரிவித்துள்ளனர். ஆனால் வெற்றிமாறன் இந்த பழக்கத்தை விட முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இருப்பினும் ஒரு மாதம் புகை பிடிப்பதை தவிர்த்துள்ளார். அதன் பின்னர் டென்ஷன் காரணமாக ஒரே நாளில் 170 சிகரெட் வரை ஊதித்தள்ளி உள்ளார். இப்படி செயின் ஸ்மோக்கராக இருந்த வெற்றிமாறன் கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான வாரணம் ஆயிரம் படத்தில் நடிகர் சூர்யா புகைப் பழக்கத்தில் இருந்து மீண்டு வரும் காட்சிகளை பார்த்து சிகரெட் பிடிப்பதை நிறுத்தியுள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.