இயக்குனர் வெங்கட் பிரபு படைப்பில் நாக சைதன்யா நடிக்கும் புதிய படத்தை குறித்து முக்கிய அப்டேட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
வெங்கட் பிரபு – நாக சைதன்யா:
கோலிவுட்டில் மங்காத்தா, சென்னை 60028 போன்ற வெற்றிப்படங்களை கொடுத்து மக்களிடம் பிரபலமானவர் தான் வெங்கட் பிரபு. இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த மாநாடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை தேடி தந்தது. குறிப்பாக இந்த திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது குறிப்பிடத்தக்கது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
தற்போது தெலுங்கு சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார் வெங்கட் பிரபு. அதாவது தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை வைத்து NC 22 படத்தை இயக்கி வருகிறார். அது போக இந்த படத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க, அரவிந்த்சாமி, பிரியாமணி, சரத்குமார், சம்பத் ராஜ், பிரேம்ஜி, வெண்ணிலா கிஷோர், ப்ரேமி விஸ்வநாத் ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். தற்போது இப்படத்தை குறித்து முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
அசலை நம்பி ஏமாந்தது தான் மிச்சம்? இப்பதான் புரியுது – உண்மைகளை உடைத்த பிக்பாஸ் நிவாஷினி!!
வெங்கட் பிரபு இயக்கி நாக சைதன்யா நடிக்கும் படத்திற்கு ‘Custody’ என்று பெயர் வைத்துள்ளனர். மேலும் டைட்டில் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த டைட்டில் போஸ்டர் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.