தெலுங்கு வட்டாரங்களில் பல வெற்றிப்படங்களை கொடுத்து தவிர்க்க முடியாத இயக்குனராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் வம்சி. இவர் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்து கடந்த 2016ம் ஆண்டு வெளியான தோழா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார் வம்சி. இந்த திரைப்படம் இரு நண்பர்களுக்கு இடையே இருக்கும் அன்பை மையப்படுத்தி எடுக்க பட்டிருந்ததால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, வசூலிலும் ஒரு கலக்கு கலக்கியது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதனை தொடர்ந்து தனது இரண்டாவது படத்தை தளபதி விஜய்யை வைத்து வாரிசு திரைப்படத்தை எடுத்திருந்தார். இப்படம் கடந்த ஜனவரி 11ம் தேதி வெளியாகி தற்போது வரை வெற்றிகரமாக கொண்டிருக்கிறது. மேலும் இந்த திரைப்படம் 300 கோடிக்கு மேல் வசூல் செய்து வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளார். அதற்காக சமீபத்தில் சக்ஸஸ் மீட் நடைபெற்ற நிலையில், விஜய் தனது மனைவியுடன் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரோஜா சீரியல் சிபு சூரியனுக்கு இவ்ளோ பெரிய மகனா? முதல் முறையாக மனைவியுடன் அவரே வெளியிட்ட போட்டோ!!
இந்நிலையில் இயக்குனர் வம்சி திருவண்ணாமலை கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த வம்சி, எல்லாருடைய அன்புக்கும் என்னுடைய அளவுகடந்த நன்றி. மேலும் வாரிசு படத்திற்காக நீங்க கொடுத்த அன்பு தான் என்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கிறது.
தமிழ்நாடு மக்கள் என் மேல் இவ்வளவு அன்பு காட்டியதற்கு ரொம்ப நன்றி என்று கூறியுள்ளார். அப்போது விஜய்யை வைத்து படம் எடுத்துட்டீங்க, அடுத்து அஜித்தை வைத்து எப்ப எடுக்க போறீங்களா என்று கேள்வி ஏழுப்பப்பட்டது. அதற்கு இதெல்லாம் இங்க கேக்காதீங்க, இது கோவில், நான் இங்க சாமி தரிசனம் பண்ண வந்தேன் என்று கூறி எஸ்கேப் ஆகியுள்ளார்.