எதிர்நீச்சல் சீரியல் குடும்ப பெண்களை மையப்படுத்தி எதார்த்த கதைக்களத்துடன் நகர்ந்து வருகிறது. எந்த ஒரு ஆடம்பரமும் பகட்டும் இல்லாமல் நல்ல கருத்தை மக்களுக்கு பதிய வைத்திருக்கிறார் திருச்செல்வம். கோலங்கள் சீரியலுக்கு பிறகு எதிர்நீச்சல் சீரியல் வேற லெவலில் ஹிட் கொடுக்க காத்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
அதன் முதல் படியாக தான் இப்பொழுது ஆரம்பித்த கொஞ்ச நாளிலேயே டிஆர்பி ரேட்டிங்கில் எகிறிவிட்டது. மேலும் திருச்செல்வம் சமீபத்தில் கொடுத்த இன்டெர்வியூவில் கூட இந்த சீரியல் கல்லூரி மாணவர்கள் மத்தியில் நல்ல ரீச்சை பெற்று விட்டதாக கூறியிருந்தார். இப்படி இருக்க திருச்செல்வம் தனது குடும்ப புகைப்படத்தை இதுவரையிலும் வெளியிடவில்லை.
மேலும் அதை குறித்து பெரிதாக அவர் பேசியதும் கிடையாது. மேலும் தனது சீரியல் குழு தான் தனக்கு இருக்கும் பெரிய பலம் என்றும் அதுவும் தனது சொந்த குடும்பம் தான் என்றும் பழைய இன்டெர்வியூவில் கூறியிருந்தார். இப்படி சீரியலை ரசித்து, ஒரு ஆத்மார்த்தமாக எடுப்பதால் தான் இவரது சீரியல்கள் சூப்பர்ஹிட் அடித்து விடுகிறது.