கொரோனாவால் மரணம் அடைந்த சமுத்திரக்கனி பட இயக்குனர் – அதிர்ச்சியில் திரையுலகம்!!

0

தமிழ் சினிமாவில் நடிகர் சமுத்திரக்கனியை வைத்து திரைப்படம் இயக்கிய முக்கிய இயக்குனர் ஒருவர் கொரோனா பாதிப்பால் மரணம் அடைந்துள்ளார். இதனை அடுத்து பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

“பிரபல இயக்குனர்”

இந்தியாவில் தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்த நோய் பாதிப்பால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பலர் மரணம் அடைந்து வருகின்றனர். இந்த நோய் பாதிப்பினால் அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர் கூட பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.

அல்லு அர்ஜுனுக்கு பாராட்டு தெரிவித்த சல்மான் – என்ன காரணம் தெரியுமா??

அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக சமுத்திரக்கனியை வைத்து “ஆண் தேவதை” என்ற திரைப்படத்தினை இயக்கியவர் தான் இயக்குனர் தாமிரா. இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு ஷங்கர் தயாரிப்பில் உருவான “இரட்டை சூழி” என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே இவர் தமிழ் திரையுலகின் இயக்குனர் சிகரங்களாக திகழும் பாலசந்தர் மற்றும் பாரதிராஜா ஆகியோரை வைத்து படம் இயக்கியுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனை அடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் மரணம் அடைந்துள்ளார். இவரது மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here