கிடைத்த வாய்ப்பை அநியாயமாக தவற விட்ட சூர்யா.., அவருக்கு பதில் இனி இந்த மாஸ் நடிகர் தானாம்!!

0
சூர்யாவுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்., 3 தமிழ் படங்கள் பெற்ற தேசிய அளவிலான பெருமை!!
சூர்யாவுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்., 3 தமிழ் படங்கள் பெற்ற தேசிய அளவிலான பெருமை!!

இந்திய சினிமாவில் பிரமிக்க வைக்கும் படங்களை இயக்கி தற்போது வரை முன்னணி இயக்குனராக இருந்து வருபவர் தான் ஷங்கர். இவர் தமிழ் சினிமாவில் இயக்கிய எல்லா படங்களும் சூப்பர் ஹிட் ஆனவை.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் இவரது படைப்பில் வெளியாக இருக்கும் ஆர் சி 15 திரைப்படத்திற்கு ரசிகர்கள் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படம் ஒரு பக்கம் இருந்தாலும், இயக்குனர் சங்கர் 1000 கோடி பட்ஜெட்டில் வரலாற்று தழுவிய நாவலை இயக்குவதற்கான பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

அதாவது, பிரபல எழுத்தாளர் வெங்கடேசனின் வேள்பாரி என்ற வரலாற்று நாவலை ஷங்கர் இயக்க இருக்கிறார். முதலில் கதாநாயகனாக நடிகர் சூர்யா நடிப்பதாக கூறப்பட்டது. அவர் அடுத்தடுத்து படங்களில் நடித்து பிஸியாக இருந்து வருகிறார். இதனால் அவருக்கு பதிலாக பிரபல கன்னட நடிகர் யாஷ் கமிட் ஆகியுள்ளார்.

இவர் நடித்த கே ஜி எஃப் அத்தியாயம் 1 மற்றும் 2 ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் முதன்முறையாக ஷங்கருடன் நடிகர் யாஷ் கூட்டணி வைத்துக் கொண்டதால், இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here