இயக்குனர் சங்கர், நடிகர் ராம்சரண் நடிப்பில் தெலுங்கில் இயக்கி வரும் RC 15 என்ற, படத்தின் பெயரில் ஒரு மோசடி நடந்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
தயாரிப்பு நிறுவனம் அறிக்கை:
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் சங்கர். இவர் இயக்கத்தில் ரஜினியின் 2.0 படத்திற்கு பிறகு, எந்த படமும் திரைக்கு வரவில்லை. இது போக உலக நாயகனை வைத்து இயக்கி வந்த, இந்தியன் 2 படம் மிகப்பெரிய பிரச்சனையில் சிக்கி, தற்போது மீண்டும் தொடங்க உள்ளது. இதனால் மனம் நொந்து போய் தெலுங்கு, திரையுலகிற்கு படையெடுத்த ஷங்கர் அங்கு பிஸியான இயக்குனராக மாறியுள்ளார்.
தற்போது நடிகர் ராம்சரண் நடிக்கும் RC 15 என்ற படத்தை இயக்கி வருகிறார். விஜய்யின் வாரிசு படத்தை தயாரிக்கும் நிறுவனம் இதை தயாரித்து வருகிறது. தற்போது இந்த படத்திற்கு நடிகர்கள் தேர்வு நடப்பதாக வதந்தி ஒன்று இணையத்தில் பரவியது. இது குறித்து விளக்கம் அளித்த தயாரிப்பு நிறுவனம், இது உண்மை இல்லை என அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து கருத்து பதிவிட்ட ரசிகர்கள், இது என்ன ஷங்கருக்கு வந்த புது தலைவலி? என கமெண்ட் செய்து வருகின்றனர்.
A note of caution to everyone #RC15 #SVC50 pic.twitter.com/KRPiykeCk2
— Sri Venkateswara Creations (@SVC_official) July 24, 2022
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்