‘எனது வாழ்வில் கேட்ட சிறந்த கதை இது’….,இயக்குனர் செல்வராகவன் நெகிழ்ச்சி….,

0
'எனது வாழ்வில் கேட்ட சிறந்த கதை இது'....,இயக்குனர் செல்வராகவன் நெகிழ்ச்சி....,
'எனது வாழ்வில் கேட்ட சிறந்த கதை இது'....,இயக்குனர் செல்வராகவன் நெகிழ்ச்சி....,

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் வித்தியாசமான நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘ஃபர்ஹானா’. இந்த படத்தை ‘ஒருநாள் கூத்து’, ‘மான்ஸ்டர்’ போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார். நடிகை ஐஸ்வர்யா ராஜேசுடன் இணைந்து நடிகர் ஜித்தன் ரமேஷ், இயக்குனர் செல்வராகவன் என பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஒரு இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த பெண், குடும்ப கஷ்டத்துக்காக கால் சென்டரில் வேலை பார்ப்பதும், அந்த வேலையால் அவரது குடும்பத்தில் உருவாகும் பிரச்சனைகளையும் யதார்த்தமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் நெல்சன். இந்த படத்தின் கதை குறித்து இயக்குனர் செல்வராகவன் தனது கருத்துக்களை தற்போது பதிவிட்டுள்ளார்.

ட்ரெண்டிங்கில் ‘கங்குவா’ இயக்குனர் சிவா….,வைரலாகும் புகைப்படம்…..,

இந்த திரைப்படம் குறித்து அவர் கூறுகையில், ‘ஃபர்ஹானா கதை எனது வாழ்நாளில் கேட்ட சிறந்த கதைகளில் ஒன்று. இந்த காவியத்தில் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி’ என்று கூறியுள்ளார். தற்போது திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ‘ஃபர்ஹானா’ திரைப்படம் ரசிகர்களிடம் இருந்து நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here