நயன்தாராவை அலறவிட்ட பயங்கரமான வில்லன் – இயக்குனர் சசிகுமாருடன் கூட்டணி வைத்து அசத்தல்!!

0
நயன்தாராவை அலறவிட்ட பயங்கரமான வில்லன் - இயக்குனர் சசிகுமாருடன் கூட்டணி வைத்து அசத்தல்!!
நயன்தாராவை அலறவிட்ட பயங்கரமான வில்லன் - இயக்குனர் சசிகுமாருடன் கூட்டணி வைத்து அசத்தல்!!

இயக்குனர் சசிகுமார் இயக்க இருக்கும் குற்றப்பரம்பரை வெப் சீரிஸ் தொடரில் வில்லன் கதாபாத்திரம் குறித்து சமூக வலைத்தளங்களில் முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

குற்றப்பரம்பரை:

தற்போதைய சினிமாவில் பல இயக்குனர்கள் நாவல்களை மையமாக வைத்து படத்தை எடுத்து வருகின்றனர். குறிப்பாக மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன், வெற்றிமாறனின் விடுதலை, அசுரன் ஆகிய படங்கள் நாவலின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் தான். அந்த வகையில் தற்போது இயக்குனர் சசிகுமார், பிரபல எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தி எழுதிய ‘குற்றப்பரம்பரை’ என்னும் நாவலை வெப் சீரிஸாக எடுக்க இருக்கிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் இந்த தொடரின் கதையை வேல ராமமூர்த்தி எழுத உள்ளதாகவும், பிரபல ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இந்த வெப் தொடரை தயாரிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் இதில் நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்தின் மகனான சண்முக பாண்டியன் நாயகனாக நடிக்கிறார். அதுமட்டுமின்றி நடிகர் ராணா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

பொன்னியின் செல்வனை மணிரத்னம் எடுக்க வேண்டாம்..,அப்பவே சொன்ன அமைச்சர் துரைமுருகன் – வெளியான அதிர்ச்சி தகவல்!!

இந்நிலையில் இப்படத்தின் வில்லன் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த தொடரில் பிரபல பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யப் வில்லனாக நடிக்க இருக்கிறாராம். இவர் இதற்கு முன்னர் நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் படத்தில் அவருக்கு வில்லனாக நடித்து அசத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here