எஸ் எஸ் ராஜமவுலியை கொலை செய்ய ஒரு கும்பல் திட்டமிடுவதாக பிரபல இயக்குனர் அறிவுரை கூறுவது போல் ட்வீட் செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எஸ் எஸ் ராஜமவுலி:
தென்னிந்திய தமிழ் சினிமாவில் சங்கருக்கு பிறகு ஒரு படத்தை பிரமாண்டமாக எடுக்கும் திறமை உடையவர் தான் இயக்குனர் எஸ் எஸ் ராஜமவுலி. அதன்படி இவர் இயக்கிய நான் ஈ, மாவீரன், பாகுபலி, பாகுபலி 2 மற்றும் RRR ஆகிய படங்கள் விமர்சன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. மேலும் கடைசியாக வெளிவந்த பாகுபலி 2 மற்றும் RRR திரைப்படம் 1000 கோடிகளை வசூலித்து பெரிய சாதனை படைத்தது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அதுமட்டுமின்றி சமீபத்தில் RRR திரைப்படத்தை பார்த்து அவதார் பட இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் புகழாரம் பாடி, ஹாலிவுட்டில் படம் பண்ணனும்னு சொன்னிங்கன்னா நான் உதவி பண்றேன் என்று கூறினார். இந்த நிலையில் பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
அதாவது எஸ் எஸ் ராஜமவுலியை திரையுலகில் என்னை உட்பட உங்கள் மீது பொறாமை கொண்ட தயாரிப்பாளர்கள் சிலர் உங்களை கொலை செய்ய ஒரு கும்பலை ரெடி செய்து உள்ளதால், நீங்கள் உங்களுடைய பாதுகாப்பை கொஞ்சம் பலப்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். மேலும் உங்களை கொலை செய்யும் அந்த கும்பலில் நானும் ஒருவன் என்று கிண்டலாகவும் பேசியுள்ளார். அதுமட்டுமின்றி பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர்களை எல்லாம் நீங்கள் மிஞ்சிவிட்டீர்கள் என்று கூறியுள்ளார்.
And sir @ssrajamouli , please increase ur security because there is a bunch of film makers in india who out of pure jealousy formed an assassination squad to kill you , of which I am also a part ..Am just spilling out the secret because I am 4 drinks down
— Ram Gopal Varma (@RGVzoomin) January 23, 2023