நடிகர் விஜய் சேதுபதி மற்றும் மாதவன் நடிப்பில் கடந்த 2017ம் ஆண்டு வெளியான விக்ரம் வேதா திரைப்படம் குறித்து பேட்டி ஒன்றில் இயக்குனர் புஷ்கர் -காயத்ரி சில தகவல்களை தெரிவித்துள்ளார்.
புஷ்கர் -காயத்ரி:
கோலிவுட்டில் ஜோடியாக படங்களை இயக்கும் இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர்கள் தான் புஷ்கர் -காயத்ரி. அவர்கள் இயக்கிய விக்ரம் வேதா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி விஜய் சேதுபதி ஹீரோவில் இருந்து வில்லனாக மாறி மாஸ் காட்ட ஆரம்பித்ததே இந்த படத்தில் தான்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
தமிழில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா, சமீபத்தில் ஹிந்தியில் ரீமேக் செய்து திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அண்மையில் நடந்த பேட்டி ஒன்றில் விக்ரம் வேதா படத்தை குறித்து புஷ்கர் -காயத்ரி சில தகவல்களை தெரிவித்துள்ளார். அதாவது விக்ரம் வேதா திரைப்படத்தை முதலில் வெப் சீரிஸாக தான் எடுக்க இருந்தோம்.
மேலும் வெவ்வேறு கோணத்தில் செல்லும் வெவ்வேறு கேரக்டர் வைத்து ஒவ்வொரு எபிசோடாக எடுக்கலாம் என்று திட்டமிட்டிருந்தோம். ரசிகர்கள் எந்த எபிசோடை பார்க்க விரும்புகிறார்களோ, அந்த கதையை விரிவாக எடுக்கலாம் என்று நினைத்திருந்தோம் என்று புஷ்கர் -காயத்ரி தெரிவித்துள்ளனர். அவர்கள் தயாரிப்பில் உருவான வதந்தி வெப் சீரிஸ் டிசம்பர் 2ம் தேதி ஓடிடியில் ரிலீஸ் ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.