“சலார்” படத்தை தொடர்ந்து பாலிவுட் நடிகருடன் கைகோர்க்கும் பிரசாந்த் நீல்..,இந்த ஒரு காம்பினேஷனை எதிர்பார்க்கல!!

0
"சலார்" படத்தை தொடர்ந்து பாலிவுட் நடிகருடன் கைகோர்க்கும் பிரசாந்த் நீல்..,இந்த ஒரு காம்பினேஷனை எதிர்பார்க்கல!!

இயக்குனர் பிரசாந்த் நீல் படைப்பில் உருவாகி வரும் சலார் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்த படம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இயக்குனர் பிரசாந்த் நீல்:

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கன்னட மொழிப் படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெறாத சூழ்நிலையை உடைத்தெறிந்த திரைப்படம் தான் கேஜிஎப். அதன் பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் அதிக அளவில் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது. இந்தப் படத்தை பிரஷாந்த் நீல் இயக்கியிருந்த நிலையில் யஷ் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதனை தொடர்ந்து பாகுபலி பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் சலார் படத்தை பிஸியாக எடுத்து வருகிறார் பிரசாந்த் நீல். இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாக இருப்பதாக சமீபத்தில் பிரசாந்த் நீல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் பிரசாந்த் நீல் இயக்க இருக்கும் அடுத்த திரைப்படம் குறித்து முக்கிய அப்டேட் சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.

தளபதி குரலில் பேசி அசத்திய அமுதவாணனின் மூத்த மகன்.., புலிக்கு பொறந்தது பூனையாகுமா?

அதாவது தற்போது பிரசாத் நீல் சலார் படத்தில் மும்மரமாக இருந்து வரும் நிலையில், இப்படத்தை முடித்துவிட்டு பாலிவுட் நடிகரான அமீர் கானுடன் இணைய பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு படக்குழுவினரிடம் இருந்து கூடிய விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here