தென்னிந்திய தமிழ் சினிமாவில் நம்பர் 1 நடிகையாக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. அவரின் சினிமா கெரியரில் பல ஏற்ற இறக்கங்களை பார்த்திருந்தாலும், தற்போது லேடி சூப்பர் ஸ்டார் என்ற அளவுக்கு உயர்ந்து நிற்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். ஏன் சொல்லப்போனால் முன்னணி ஹீரோக்கு இருக்கும் மவுஸ் இவருக்கும் இருக்கிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த இவர் தற்போது தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதற்கிடையில் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டு வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
இப்படி சினிமாவிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பிசியாக இருந்து வரும் இவரின் முதல் படம் ஐயா என்ற தெரியும். ஆனால் அதற்கு முன்னர் பார்த்திபன் படத்தில் நடிக்க இருந்தார் என்பது யாருக்கும் தெரியாது. ஆமாங்க, பார்த்திபன் இயக்கி நடித்த குடைக்குள் மழை என்ற படத்தில் நடிக்க நயன் முதலில் தனது புகைப்படத்தை அனுப்பி வைத்துள்ளார்.
IT துறையில் பணிபுரிய ஆசையா?? பிரபல நிறுவனத்தில் பயிற்சியுடன் வேலை!!
அந்த புகைப்படத்தை பார்த்து பார்த்திபன் ஆடிஷன் செய்வதற்காக வர சொல்லி இருக்கிறார். ஆனால் நயனால் போக முடியாமல் போனது. அடுத்த நாள் அவரிடம் கால் செய்து Sorry சார் என்னால் நேற்று வர முடியாமல் போனது நான் இப்பொழுது தான் கிளம்புகிறேன் என்று கூறியுள்ளார். அதற்கு பார்த்திபன் நீ வரவே வேண்டாம் என்று கோபத்துடன் கத்தியுள்ளார். இதை பார்த்திபன் ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.