இயக்குநர் கோ.தனபாலன் இயக்கத்தில் உருவான ‘பருந்தாகுது ஊர்க்குருவி’ பட நிகழ்ச்சியில் குறித்து மாரி செல்வராஜ் எமோஷனலாக பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
மாரி செல்வராஜ்
தமிழ் சினிமாவில் சாதியை மையமாக வைத்து படம் எடுப்பவர்களில் ரஞ்சித்துக்கு அப்புறம் இருப்பவர் தான் மாரி செல்வராஜ். அந்த வகையில் இவர் இயக்கிய கர்ணன், பரியேறும் பெருமாள் போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. தற்போது உதய நிதியை வைத்து மாமன்னன் திரைப்படம் படத்தை எடுத்து வருகிறார். இந்நிலையில் இயக்குநர் கோ.தனபாலன் இயக்கத்தில் உருவான பருந்தாகுது ஊர்க்குருவி பட நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அப்போது மேடையில் தனபாலன் குறித்து மாரி செல்வராஜ் பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அவர் பேசியதாவது, நான் படம் எடுக்கணும் ஆசையா வந்தப்ப ரஞ்சித் மற்றும் தனபாலன் அவர்கள் ஆபிசில் Office boy வேலை பார்த்தேன். அப்போது தனபாலன் அண்ணன் என்கிட்ட என்ன படிச்சுருக்கனு கேட்டார். அதற்கு நான் law college னு சொன்னேன். அப்போது அவர் எனக்கு கொடுத்த advice இன்னும் நியாபகம் இருக்கு. மேலும் அவர் பெரிய இயக்குனரா வந்துருவாரு, அவரை பிடித்து கொண்டு நம்ம மேல வந்துருவோம்னு நினைச்சேன்.
ஆனா அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. நாங்க சினிமால வந்த பிறகு, தனபாலன் அண்ணனை introduce பண்றதுக்கு எனக்கு தகுதி இல்லை. இப்ப அண்ணன் பட பண்ணி இந்த மேடையை கைப்பற்றி வச்சிருக்காரு என்றால் எனக்கு ஹாப்பியா இருக்கு. எங்க கூட இருந்த எல்லாரும் வெளிய வர தொடங்கிட்டாங்க. எனவே இந்த படம் கண்டிப்பா ஜெயிக்கணும்.. என் அண்ணன் ஜெயிக்கணும் என்று கண் கலங்ககி பேசினார். தற்போது அவர் பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.