இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் துருவ் விக்ரம் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தை குறித்து முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
இயக்குனர் மாரி செல்வராஜ்:
தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த கொஞ்சம் காலத்திலே முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் மாரி செல்வராஜ். இவர் இயக்கத்தில் வெளிவந்த பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. தற்போது உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில், இறுதி கட்ட பணிகளில் படக்குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும் மாமன்னன் திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகலாம் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை தொடர்ந்து வாழை என்ற படத்தை இயக்கி வருகிறார் மாரி செல்வராஜ். இது குறித்து அறிவிப்பை படக்குழுவினர் போஸ்டர் மூலம் வெளியிட்டனர்.
இப்படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக இருந்து வரும் மாரிசெல்வராஜின் அடுத்த படத்தை குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் புது படத்தில் துருவ் விக்ரம் நடிக்க இருக்கிறார். மேலும் இப்படத்தின் ஷூட்டிங் வருகிற ஜூலை மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. மாரி செல்வராஜ் இயக்கும் இப்படத்தை நீலம் ப்ரொடக்ஷன் சார்பில் பா.ரஞ்சித் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.