திரையுலகில் தளபதி, நாயகன் போன்ற பல வெற்றிப் படங்களை கொடுத்து ரசிகர் மத்தியில் பிரபலமானவர் தான் இயக்குனர் மணிரத்தினம். தற்போது இவர் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பாகம் ஒன்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் இந்த வருடத்தில் எந்த திரைப்படமும் அள்ளாத அதிக வசூலை அள்ளி சாதனை படைத்து வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்நிலையில் இயக்குனர் மணிரத்தினம் உருவாக்கிய பொன்னியின் செல்வன் மட்டுமின்றி ஏராளமான படங்களில் புது நடிகர்கள், நடிகைகள் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது வரை ஒரு பிரபலத்திற்கு மட்டும் வாய்ப்பு கொடுக்காமல் இருக்கிறார். அவர் வேறு யாரும் இல்லை மணிரத்தினத்தின் மனைவியான நடிகை சுஹாசினி தான்.
இவர் 90ஸ் களில் பிரபல நடிகையாக திகழ்ந்தவர். படத்தில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் பயப்படாமல் அசால்டாக நடித்தவர். தற்போது சுஹாசினி தெலுங்கில் குர்துண்டா சீதகாலம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படி மற்ற இயக்குனர்கள் அவருக்கு வாய்ப்பு தரும் போது, மணிரத்னம் ஏன் தர மறுக்கிறார்? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.